states

img

உ.பி: லஞ்சம் தர மறுத்த பெண் மீது துப்பாக்கிச்சூடு?

உத்தரப்பிரதேசத்தில் லஞ்சம் தர மறுத்த பெண் மீது எஸ்.ஐ துப்பாக்கிச்சூடு நடந்ததாக அப்பெண்ணின் உறவினர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வந்த பெண் ஒருவர் லஞ்சம் தர மறுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அப்பெண்ணை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், எஸ்.ஐ தலைமறைவாக உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.